பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக யுத்தக்குற்றவாளி கமல் குணரத்ன

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக கோட்டா பதவிப்பிரமாணம் செய்யப்பட்ட பின்னர் வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும். இராணுவத்தின் 53 வது படையணிக்கு இறுதிப்போரின்போது கமல் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.